பால்குடம் எடுத்த பக்தர்கள்

மேலுார்: மேலுாரில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நேற்று பக்தர்கள் மண் கட்டி தெப்பக்குளத்தில் இருந்து பால்குடம் எடுத்து கிருஷ்ணன் கோயிலுக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தொடர்ந்து சுவாமிக்கு பாலாபிஷேகம் நடந்தது. பிறகு உறியடி நிகழ்ச்சியும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. மாலை கிருஷ்ணன் சுவாமி ரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

Advertisement