ஓணம் திருவிழா கொண்டாட்டம்

தர்மபுரி: கேரள சமாஜம் சார்பில், 24-வது ஆண்டு ஓணம் திருவிழா, தர்மபு-ரியில் நேற்று நடந்தது. கேரள சமாஜம் தலைவர் கிருஷ்ணன் உன்னி தலைமை வகித்தார். இதில், கேரளாவை சேர்ந்த பெண்கள் தங்கள் பாரம்பரிய உடை அணிந்து, அத்தப்பூ கோல-மிட்டு பாரம்பரிய நடனமான கைகொட்டி களி நடனத்தை ஆடி கொண்டாடினர்.

இதில், முக்கிய நிகழ்வாக, மகாபலி சக்கரவர்த்தி வேடமணிந்து வந்தவர் அனைவருக்கும் ஆசி வழங்கினார். அதன் தொடர்ச்சியாக சமாஜம் சார்பில், நடந்த பல்வேறு போட்-டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பல்-வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன. கேரளாவில் தங்கள் குடும்பத்-துடன் கொண்டாடாடுவதை போல, தர்மபுரியிலுள்ள கேரள மாநி-லத்தவர்கள் ஒன்று கூடி கடந்த, 24 ஆண்டுகளாக கொண்டாடி வருகின்றனர்.

Advertisement