மக்கள் குறைதீர் கூட்டம் நலத்திட்ட உதவி வழங்கல்

கரூர்; கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த, மக்கள் குறைதீர் கூட்டத்தில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நேற்று வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. அதில் இலவச வீட்டுமனை பட்டா, உதவித்-தொகை, சாலை வசதி, குடிநீர் வசதி உள்பட, பல்-வேறு கோரிக்கைகள் அடங்கிய, 653 மனுக்கள் பொதுமக்கள் தரப்பில் வழங்கப்பட்டது. பிறகு நான்கு பயனாளிகளுக்கு, 23 ஆயிரத்து, 789 ரூபாய் மதிப்பில், நலத்திட்ட உதவிகளை கலெக்டர் முத்துக்குமரன் வழங்கினார். அப்-போது, டி.ஆர்.ஓ., விமல்ராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார் உள்பட, அரசு துறை அதி-காரிகள் உடனிருந்தனர். முன்னதாக, கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளிடம், அவர்களது இருப்பிடத்துக்கு சென்று, கலெக்டர் முத்துக்குமரன் மனுக்களை பெற்றார்.

Advertisement