வருமான வரி பிடித்தஆலோசனை  கூட்டம்  

சிவகங்கை, செப். 9-சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் சம்பளம் வழங்கும் அலுவலர்களுக்கு வருமான வரி பிடித்தம் சார்ந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட கருவூலக அலுவலர் கண்ணன் தலைமை வகித்தார். மதுரை வருமான வரித்துறை துணை கமிஷனர் ரவீந்திரன், வருமான வரி அலுவலர் மணிகண்டன் முன்னிலை வகித்தனர். அனைத்து துறை சம்பளம் வழங்கும் அலுவலர்கள் பங்கேற்றனர். இதில் அரசு அலுவலர், ஆசிரியர்களின் சம்பள பட்டியலில் வருமான வரி பிடித்தம் மற்றும் வரி பணியாளர்களுக்கு வருமான வரி பிடித்தம் தொடர்பாக சம்பளம் வழங்கும் அலுவலர்களின் கடமை, பொறுப்பு குறித்து விளக்கம் அளித்தனர். 

Advertisement