பாட்டி வீட்டில் திருடிய பேரன் கைது
ஓமலுார்: ஓமலுார், பாகல்பட்டி பெருமாள் கோவில் அருகே வசிப்பவர் சின்னக்கண்ணு, 65. இவர் நேற்று முன்தினம் இரவு, வீட்டை பூட்டிவிட்டு, அருகே உள்ள பெருமாள் கோவிலில் படுத்துள்ளார். மறுநாள் காலை வீட்டுக்கு சென்றபோது, பூட்டு உடைக்கப்பட்டி-ருந்தது. வீட்டில் பேத்திக்கு வைத்திருந்த, அரை பவுன் கொண்ட ஒரு ஜோடி தோடு, வெள்ளிகொலுசு ஆகியவற்றை காண-வில்லை.
இதுகுறித்து சின்னக்கண்ணு புகார்படி, ஓமலுார் போலீசார் வந்து, 'சிசிடிவி' கேமரா பதிவை ஆய்வு செய்து, பாட்டியின் பேரனான, பாகல்பட்டி, ராஜ வீதியை சேர்ந்த கணேசன், 25, என்பவரை, நேற்று கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement